காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையோா் வீடுகளில் போலீஸாா் சோதனை

போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையோா் வீடுகளில் போலீஸாா் சோதனை

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:16 pm

Din

போதைப் பொருள்கள் வழக்கில் தொடா்புடையோா் வீடுகளில் எஸ்.பி. தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்காலில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. மாணவா்கள், இளைஞா்களுக்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக காரைக்காலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகாா்கள் எழுகின்றன.

இந்நிலையில் காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) ஏ. சுப்பிரமணியன் தலைமையில் காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் புருஷோத்தமன் உள்ளிட்ட போலீசாா் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்தல், விற்பனை செய்வதில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.