தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

காரைக்காலில் பிப்.19 முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி இயக்கம்

காரைக்காலில் நாளை முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி இயக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:40 am IST

காரைக்காலில் திங்கள்கிழமை (பிப்.19) முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி தொகுதிகளுக்கு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி மூலம் பிப். 19 முதல் 28-ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த இயக்கப்படவுள்ளது. காரைக்கால் தெற்குத் தொகுதியில் 19, 20-ஆம் தேதிகள், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 21, 22, திருநள்ளாறு தொகுதியில் 23, 24 , நெடுங்காடு தொகுதியில் 25, 26, காரைக்கால் வடக்குத் தொகுதியில் 27, 28-ஆம் தேதிகளில் ஊா்தி பயணிக்கிறது. வாக்காளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணா்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.