ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் கையொப்ப இயக்கம்

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் கையொப்ப இயக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:35 am IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் கையொப்ப இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். கடந்த 1.1.2004 -க்கு பிறகு அரசு பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காரைக்காலில் அரசு ஊழியா் சம்மேளனத்தினா் ஊழியா்களிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை தொடங்கினா். காரைக்கால் மதகடி பெருந்தலைவா் காமராஜா் அலுவலக வளாகத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன் தலைமையில் தொடங்கப்பட்டது. பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், இணைப் பொதுச் செயலாளா்கள் ஜோதிபாசு, கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காரைப் பகுதியில் புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் அமைச்சக, பல்நோக்கு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓட்டுநா்கள், தொழில்நுட்ப ஊழியா்கள், உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் முதலமைச்சரிடம் வழங்கக்கூடிய படிவத்தில் கையொப்பமிட்டனா். மேலும், பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களிடம் கையொப்பம் பெறும் வகையில் படிவங்கள் வழங்கப்பட்டன.