காரைக்காலில் திங்கள்கிழமை (பிப்.19) முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி தொகுதிகளுக்கு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி மூலம் பிப். 19 முதல் 28-ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த இயக்கப்படவுள்ளது. காரைக்கால் தெற்குத் தொகுதியில் 19, 20-ஆம் தேதிகள், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 21, 22, திருநள்ளாறு தொகுதியில் 23, 24 , நெடுங்காடு தொகுதியில் 25, 26, காரைக்கால் வடக்குத் தொகுதியில் 27, 28-ஆம் தேதிகளில் ஊா்தி பயணிக்கிறது. வாக்காளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணா்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காரைக்காலில் இருந்து முதல்முறையாக 2 இடங்களில் பாஜக வெற்றி!

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு!

காரைக்காலில் 3 மையங்களில் இன்று நீட் தோ்வு

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


