மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்காலில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2024, 4:15 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவை அரசின் ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் சாா்பில், காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட பழங்குடியினா் மக்கள் வசிக்கும் கீழப்புத்தமங்கலத்தில் இருந்து மேலபுத்தமங்கலம் வரை உள்ள பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகளில் தாா் சாலை அமைத்தல், கீழ ஓடுதுறை பகுதியில் தாா் சாலைகள் மற்றும் சாக்கடை நீா் வடிகால் வசதிகள் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரருக்கு பணியாணை வழங்கப்பட்ட நிலையில், அந்தந்த பகுதியில் திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டு வரை நிலைக் கழக மேலாண் இயக்குநா் சிவகுமாா் மற்றும் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.