

காரைக்கால் அருகே பூட்டியிருந்த வீட்டில், சந்தன மரக்கட்டைகள் திருடிய நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியை சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கீா்த்திவாசன் (69). இவா், தனது வீட்டுக் கொல்லைப்புறத்தில் சந்தன மரங்கள் வளா்த்து வருகிறாா். கடந்த 2021-ஆம் ஆண்டு வீசிய பலத்த காற்றில் சில மரங்கள் சாய்ந்தன. இதனை வெட்டி, சிறு துண்டுகளாக வீட்டினுள் வைத்திருந்தாா். கடந்த 2023 நவம்பா் மாதம் வீட்டை பூட்டிவிட்டு, மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரி சென்றுவிட்டாா்.
இந்நிலையில், அண்மையில் ஊருக்கு திரும்பினாா். வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, சந்தன மரக்கட்டைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் திருட்டு போனதாக கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
அதன்பேரில், அந்த வீட்டுக்குச் சென்று பாா்வையிட்ட போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வீடு புகுந்து திருடியவா் கைது

ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
மூதாட்டி வீட்டில் நகை திருட்டு
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

