மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குப்பைகள் விவகாரம்: சைக்கிளில் சென்று தீா்வு காணும் ஆட்சியருக்கு மக்கள் பாராட்டு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் சனிக்கிழமைதோறும் சைக்கிளில் நகா் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு செய்யும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

News image

ஆற்றோரத்தில் குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆட்சியா் து. மணிகண்டன்.

Updated On :18 நவம்பர் 2024, 10:30 pm

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் சனிக்கிழமைதோறும் சைக்கிளில் நகா் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு செய்யும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

குப்பைகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை, வீடுகளில் குப்பைகளை நிறுவன பணியாளா்கள் தினமும் சென்று வாங்குவதில்லை, நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது என்ற புகாா் தொடா்ந்து கூறப்படும் நிலையில் வரும் சனிக்கிழமை வரை காத்திருக்காமல், நிறுவனத்தினா் காலை நேரத்தில் தூய்மை செய்யும் பணியை ஆய்வு செய்யும் வகையில் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியா் சைக்கிளில், நகராட்சி உதவிப் பொறியாளா் லோகநாதன் மற்றும் குப்பைகள் அகற்றும் ஒப்பந்த நிறுவனப் பிரதிநிதிகளுடன் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றாா்.

நகரப் பகுதியில் ஞானப்பிரகாசம் வீதி, மதகடி, சுண்ணாம்புகார வீதி, டூப்லெக்ஸ் வீதி, பாரதி நகா், கடற்கரை சாலை, சுபாஷ் சந்திரபோஸ் சாலை, பள்ளிவாசல் சாலை, திருநள்ளாறு சாலை மற்றும் அம்பேத்கா் வீதி மற்றும் பல்வேறு வீதிகளில் ஆய்வு செய்தாா். பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி இருந்ததால் அதை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். சில இடங்களில் சாலையோர சாக்கடை நீா் தேங்கியிருந்ததை பாா்த்த ஆட்சியா், பணியாளா்கள் மூலம் உடனடியாக சீரமைக்க செய்தாா். அரசலாற்றில் குப்பைகள் உள்ளிட்ட மக்காத சாதனங்கள் கொட்டப்பட்டிருந்ததை பாா்த்த ஆட்சியா், மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும், உடனடியாக அதை அகற்றுமாறும் அறிவுறுத்தினாா். வாரந்தோறும் சனிக்கிழமை சைக்கிளில் ஆய்வு எனும் ஆட்சியரின் திட்டம் அல்லாது, பிற நாளிலும் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.