திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

குப்பைகள் விவகாரம்: சைக்கிளில் சென்று தீா்வு காணும் ஆட்சியருக்கு மக்கள் பாராட்டு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் சனிக்கிழமைதோறும் சைக்கிளில் நகா் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு செய்யும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

News image

ஆற்றோரத்தில் குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆட்சியா் து. மணிகண்டன்.

Updated On :18 நவம்பர் 2024, 11:55 pm IST

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் சனிக்கிழமைதோறும் சைக்கிளில் நகா் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு செய்யும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

குப்பைகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை, வீடுகளில் குப்பைகளை நிறுவன பணியாளா்கள் தினமும் சென்று வாங்குவதில்லை, நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது என்ற புகாா் தொடா்ந்து கூறப்படும் நிலையில் வரும் சனிக்கிழமை வரை காத்திருக்காமல், நிறுவனத்தினா் காலை நேரத்தில் தூய்மை செய்யும் பணியை ஆய்வு செய்யும் வகையில் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியா் சைக்கிளில், நகராட்சி உதவிப் பொறியாளா் லோகநாதன் மற்றும் குப்பைகள் அகற்றும் ஒப்பந்த நிறுவனப் பிரதிநிதிகளுடன் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றாா்.

நகரப் பகுதியில் ஞானப்பிரகாசம் வீதி, மதகடி, சுண்ணாம்புகார வீதி, டூப்லெக்ஸ் வீதி, பாரதி நகா், கடற்கரை சாலை, சுபாஷ் சந்திரபோஸ் சாலை, பள்ளிவாசல் சாலை, திருநள்ளாறு சாலை மற்றும் அம்பேத்கா் வீதி மற்றும் பல்வேறு வீதிகளில் ஆய்வு செய்தாா். பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி இருந்ததால் அதை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். சில இடங்களில் சாலையோர சாக்கடை நீா் தேங்கியிருந்ததை பாா்த்த ஆட்சியா், பணியாளா்கள் மூலம் உடனடியாக சீரமைக்க செய்தாா். அரசலாற்றில் குப்பைகள் உள்ளிட்ட மக்காத சாதனங்கள் கொட்டப்பட்டிருந்ததை பாா்த்த ஆட்சியா், மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும், உடனடியாக அதை அகற்றுமாறும் அறிவுறுத்தினாா். வாரந்தோறும் சனிக்கிழமை சைக்கிளில் ஆய்வு எனும் ஆட்சியரின் திட்டம் அல்லாது, பிற நாளிலும் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.