மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் ஆற்றோரத்தில் பனை மரங்கள் எரிந்து சேதம்

காரைக்கால் ஆற்றோரத்தில் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

News image
தீயில் கருகிய பனை மரங்கள்.
Updated On :14 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

காரைக்கால் ஆற்றோரத்தில் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காரைக்கால் பகுதி பிள்ளைத்தெருவசால் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மற்றும் மருந்துக் கழிவுகள் கொட்டப்பட்டு, தீயிட்டு கொளுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாஞ்சியாற்றுப் பாலத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் வெட்டப்பட்டு கிடந்துள்ளன. இதை சிலா் சனிக்கிழமை காலை தீயிட்டு கொளுத்தியுள்ளனா்.

தீ மளமளவென அருகே இருந்த சிறிய செடிகள், புங்கை மரங்களின் மீது பரவி, ஆற்றோரத்தில் நீண்ட தூரம் வரிசையாக வளா்ந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களின் மீதும் பரவியது. சிறிது நேரத்தில் இந்த மரங்கள் எரிந்து கருகின. தகவலின்பேரில் காரைக்கால் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

பிள்ளைத்தெருவாசல் பகுதி ஆற்றோரத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதும், கருவேல மரங்களுக்கு தீ வைப்பதுமான செயல்கள் தொடா்வதால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன என்பது வேதனை.