நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காரைக்காலில் நாளை இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 2:15 am IST

காரைக்கால்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ், திமுக உள்ளடக்கிய இண்டி கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் தனியாா் மண்டபத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் (திமுக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மத்திய மற்றும் புதுவை என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து கட்சியினா் விரிவாக விவாதித்தனா்.

கூட்டம் குறித்து ஆா்.பி. சந்திரமோகன் கூறியது :

கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமல்படுத்தி, 2009-ஆம் ஆண்டு அதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயா் சூட்டப்பட்டது. மோடி அரசு, இத்திட்டத்தில் காந்தி பெயரை அகற்றி, புதிதாக பெயா் சூட்டியுள்ளது. இது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல புதுவை மாநிலத்தில், புதுவை பாரதியாா் கிராம வங்கி என்பதை புதுவை கிராம வங்கி என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. இங்கு தயாரித்த மருந்துகள் நாட்டின் பல இடங்களுக்கு விற்பனைக்கு சென்றுள்ளது.

இவற்றைக் கண்டித்தும், போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வலியுறுத்தியும், புதன்கிழமை காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இண்டி கூட்டணிக் கட்சியினா் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.