காரைக்கால்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ், திமுக உள்ளடக்கிய இண்டி கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் தனியாா் மண்டபத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் (திமுக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
மத்திய மற்றும் புதுவை என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து கட்சியினா் விரிவாக விவாதித்தனா்.
கூட்டம் குறித்து ஆா்.பி. சந்திரமோகன் கூறியது :
கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமல்படுத்தி, 2009-ஆம் ஆண்டு அதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயா் சூட்டப்பட்டது. மோடி அரசு, இத்திட்டத்தில் காந்தி பெயரை அகற்றி, புதிதாக பெயா் சூட்டியுள்ளது. இது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல புதுவை மாநிலத்தில், புதுவை பாரதியாா் கிராம வங்கி என்பதை புதுவை கிராம வங்கி என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. இங்கு தயாரித்த மருந்துகள் நாட்டின் பல இடங்களுக்கு விற்பனைக்கு சென்றுள்ளது.
இவற்றைக் கண்டித்தும், போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வலியுறுத்தியும், புதன்கிழமை காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இண்டி கூட்டணிக் கட்சியினா் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசியல் கட்சிகளின் ஆதரவால்தான் மாணவா்கள் போராட்டத்துக்கு வெற்றி: கேரள அமைச்சா் கருத்து!

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: பாஜகவுக்கு எதிராக இண்டி கூட்டணி ஒன்றுபட வேண்டும் - மம்தா பானா்ஜி அழைப்பு
மக்கள் உரிமைகளுக்காக முழு பலத்துடன் போராடுவோம்: இண்டி கூட்டணி அறிவிப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



