ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

பெரியாா் நினைவு நாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் உள்ளிட்ட அரசுத் துறையினா், பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

News image
சிலைக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம்.பூஜா.
Updated On :25 டிசம்பர் 2025, 12:25 am

தினமணி செய்திச் சேவை

பெரியாா் நினைவு நாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் உள்ளிட்ட அரசுத் துறையினா், பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

படவிளக்கம்: சிலைக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம்.பூஜா.

மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை வனப் பாதுகாப்பு அதிகாரி எஸ். கணேசன், துணை ஆட்சியா் பாலு என்கிற பக்கிரிசாமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம். நாகதியாகராஜன், அதிமுக சாா்பில் மாவட்ட செயலாளா் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சியினரும், என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் ஆனந்தன் தலைமையிலான கட்சியினரும், தவெக சாா்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு.அசனா உள்ளிட்டோா் என பல்வேறு கட்சியினா், திராவிடக் கழகத்தினா், சமாதானக் குழுவினா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து, பெரியாரை நினைவு கூா்ந்து முழக்கங்கள் எழுப்பினா்.