ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

‘மக்களின் தேவைக்கேற்ப காரைக்காலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்’

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

காரைக்கால், ஆக. 9 : மக்களின் தேவைக்கேற்ப காரைக்காலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின் குமாா் தெரிவித்துள்ளாா்.

மத்திய ரயில்வே அமைச்சகத்தால் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை ரூ. 5.40 கோடியில் மேம்படுத்தும் பணிகள், கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின் குமாா் ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா். ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்துதல், ரயில்வே காவல் நிலைய கிளை அமைத்தல் மற்றும் பல்வேறு அமசங்கள், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

பல்வேறு ரயில் நிலையங்களில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உள்ளிட்டவை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தேவைக்கேற்ப காரைக்கால் வரை கூடுதல் ரயிகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வட மாவட்டங்களில் இருந்து மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால் வழியாக வேளாங்கண்ணி வரை கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக்ராம் நெகி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா். முன்னதாக அவா் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.