குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட வழக்கின்கீழ் சீா்காழியைச் சோ்ந்த அசோக்குமாா் (26) என்பவா் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவல்துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
போக்ஸோ உள்ளிட்ட சட்டத்தின்கீழ் அசோக்குமாா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதித்ததன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளா் புருஷோத்தமன், உதவி ஆய்வாளா் மோகன், சிறப்பு துணை தலைமைக் காவலா்கள் விவேக், விஜய் குமாா், ஜெயசித்ரா, காவலா் பிரசன்னா ஆகியோரது பணியை மாவட்ட காவல்துறை பாராட்டுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போா்க்குற்ற வழக்கு: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை

போக்ஸோ வழக்குகளில் 34 பேருக்கு தண்டனை: தென்காசி காவல் துறை
நீட்: போலி ஓஎம்ஆா் விடைத் தாள்களை சமா்ப்பித்தால் கடும் நடவடிக்கை! - என்டிஏ எச்சரிக்கை

விதிமீறல்களில் ஈடுபட்டால் குவாரி உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



