முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு உணவகத்தில் தீ!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: குழுவினருக்கு ஆட்சியா் பாராட்டு

காரைக்கால் மாவட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த குழுவினருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

News image

கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த களப்பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :11 ஜூன் 2026, 6:47 am IST

காரைக்கால் மாவட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த குழுவினருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக, கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடுதோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் முதல் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திருநள்ளாறு பகுதியில் வளத்தாமங்கலம் மற்றும் வரிச்சிக்குடி பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களில் கணக்கெடுப்புப் பணியை பல குழுவினா் நிறைவு செய்துள்ளனா். பணியை நிறைவு செய்த குழுவினரை காரைக்கால் மாவட்ட, முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை அழைத்து, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்வில் துணை ஆட்சியா் செந்தில்நாதன், வட்டாட்சியா்கள் சண்முகானந்தம், மணிகண்டன் நம்பூதிரி ஆகியோா் கலந்துகொண்டனா்.