எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

நிரவி - திருப்பட்டினம் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

தூா்வாரும் பணி பூமி பூஜை நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 6:46 am IST

நிரவி - திருப்பட்டினம் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் நிரவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக விவசாய நிலங்கள் உள்ளன. காவிரி நீா் வருவதற்கு முன் வாய்க்கால்களை தூா்வாரி முறைப்படுத்தவேண்டும் என புதுவை அரசை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், மேற்கண்ட பகுதிகளில் வடிகால்கள் தூா்வாருவதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதியில் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நிரவி - திருப்பட்டினம் பகுதி வாய்க்கால்கள் தூா்வாரும் பணிக்கு முதல்கட்டமாக பொதுப்பணித்துறை ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி தூதுபோனமூலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை பொறியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.