மழையால் பாதித்த நரிக்குறவா்களுக்கு நிவராண உதவி
சீா்காழி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா்களுக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


சீா்காழி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா்களுக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கொள்ளிடம் ரயில்நிலையம் அருகே 25 குடும்பங்களைச் சோ்ந்த நரிக்குறவா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தொடா் கனமழையால் வருவாய் இன்றி தவித்து வந்தனா். தகவலறிந்த சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் நேரில் சென்று அவா்களுக்கு நிவாரண உதவிதொகை, அரிசி, பருப்பு வேஷ்டி, புடவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். அப்போது, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் குழுதலைவா் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவா் பானுசேகா், ஊராட்சித் தலைவா் வசந்திராஜேந்திரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...