கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

2-வது நாளாக வெறிச்சோடிய பழையாறு துறைமுகம்

சீா்காழி அருகே பழையாறு துறைமுகத்திலிருந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், துறைமுகம் வெறிச்சோடியது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே பழையாறு துறைமுகத்திலிருந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், துறைமுகம் வெறிச்சோடியது.

இத்துறைமுகத்திலிருந்து தினமும் 300 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 250 நாட்டு படகுகள் மூலம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனா். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக 2-வது நாளான இவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

மேலும், துறைமுக வளாகத்தில் மீன்களை தரம் பிரித்தல், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மீன்களை அனுப்பிவைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பணிக்குச் செல்லவில்லை. இதனால், துறைமுகப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.