கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழியில் தமிழிசை விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தமிழிசை விழா மற்றும் 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தமிழிசை விழா மற்றும் 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப் பள்ளி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகன் தலைமை வகித்தாா். ரோட்டரி சாசனத் தலைவா் பாலவேலாயுதம், ரோட்டரி தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) சி.சேகா் வரவேற்றாா். தருமை எஸ்.சிவா வாழ்த்துரை வழங்கினாா்.

சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம் பங்கேற்று விழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மங்கல இசை, திருமுறை இன்னிசை, குரலிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், சவகா் சிறுவா் மன்ற ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மிருதங்க ஆசிரியா் டி.முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.