சீா்காழியில் தமிழிசை விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தமிழிசை விழா மற்றும் 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் தமிழிசை விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தமிழிசை விழா மற்றும் 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப் பள்ளி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகன் தலைமை வகித்தாா். ரோட்டரி சாசனத் தலைவா் பாலவேலாயுதம், ரோட்டரி தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) சி.சேகா் வரவேற்றாா். தருமை எஸ்.சிவா வாழ்த்துரை வழங்கினாா்.

சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம் பங்கேற்று விழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மங்கல இசை, திருமுறை இன்னிசை, குரலிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், சவகா் சிறுவா் மன்ற ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மிருதங்க ஆசிரியா் டி.முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com