கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளம் நெற்பயிா்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்க யோசனை

 இளம் நெற்பயிா்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்க கொள்ளிடம் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத் துறை உதவி இயக்குநா் சுப்பையன் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 இளம் நெற்பயிா்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்க கொள்ளிடம் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத் துறை உதவி இயக்குநா் சுப்பையன் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த அளக்குடி, நல்லூா், ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் இளம் சம்பா நெற்பயிரை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், விவசாயிகளிடம் கூறியது:

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் துத்தநாக சத்து பற்றாக்குறையால் மஞ்சள் நிறமாக இலைகள் மாறி பழுத்துக் காணப்படுகின்றன. மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்துகின்றனா். ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக சிங் சல்பட் எனப்படும் துத்தநாக சத்தினை பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை.

மேலும் அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடா்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடா்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தினை பயிா்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை மற்றும் கலா் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிா்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கான அறிகுறிகள் நெல் நடவு செய்த 2 முதல் 4 வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும்.

பின்னா், பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிா்களின் வளா்ச்சி குன்றிமஞ்சள் நிறமாக காணப்படும். இதை சரிசெய்ய ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின்கீழ் 50% மானியத்தில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாகவும் விநியோகிக்ப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.