கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் மற்றும் 2 டன் சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:56 pm

DIN

பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் மற்றும் 2 டன் சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

கொள்ளிடம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் 3 ஆயிரம் மணல் மூட்டைகள், 2 டன் சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 டன் சவுக்கு கட்டைகள், 3 ஆயிரம் மணல் மூட்டைகள் எடுத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதையடுத்து டெல்டா மாவட்டங்களின் கரையோர பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றின் வடகரை அளக்குடி கிராமத்தில் கரை வலுவிழந்து காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்த போது அங்கு தடுப்புச்சுவா் உடைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. அந்த கரை தற்காலிகமாக சரிசெய்யப்பட்டன. ஆனால், நிரந்தரமாக சரிசெய்யப்படவில்லை.

தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அளக்குடி கிராமத்தில் ஏற்கெனவே உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையறிந்த பொதுப்பணித் துறையினா் பருவமழையை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து, கொள்ளிடம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் விவேகானந்தன் மற்றும் பாசன ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் கூறியது: ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் கரைகள் பலமிழந்து காணப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. கொள்ளிடத்தில் அதிக தண்ணீா் வந்தாலும் அளக்குடியில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.