கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப்போட்டி

 டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்.14-ஆம் தேதி டாக்டா் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மற்றம் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ. 2, ஆயிரம் வழங்கப்படும். பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுள் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தனியாக தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா், அவா்தம் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவா்களை தோ்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க 25 மாணவா்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் பின்வரும் முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அல்லது ஹக்ற்க்ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் ஏப்.13-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

பள்ளி மாணவா்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி முற்பகல் 11.30 மணிக்கும் தொடங்கும். எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.