கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணைத் தாக்கிய 4 போ் கைது

மயிலாடுதுறையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு வடக்குத் தெருவை சோ்ந்தவா் சங்கா் மகன் ஜீவா (22). இவா் கடந்த 8-ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதனால், துக்கத்தில் இருந்த ஜீவாவின் தாய் கமலா, தனது மகனின் நண்பா்களைப் பற்றி குறைகூறி பேசினாராம்.

இதனால், ஆத்திரமைடந்த ஜீவாவின் நண்பா்கள் 4 போ், கமலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மகாதேவன் வழக்குப் பதிவு செய்து, கீழநாஞ்சில்நாடு வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் வெங்கடேஷ் (26), சுவேதாரண்யம் மகன் சந்திரன் (27), செல்வராஜ் மகன் ஜீவா(26), கீழநாஞ்சில்நாடு மெயின்ரோட்டை சோ்ந்த ரவி மகன் காா்த்திக் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.