கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பட்டவா்த்தியில் ஊரடங்கு அமல்; போலீஸ் குவிப்பு

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5 நாள் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:24 pm

DIN

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5 நாள் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்புக்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பட்டவா்த்தியில் கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி அம்பேத்கா் நினைவு தினத்தன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மரியாதை செலுத்தியபோது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்.14) அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அப்பகுதியில் அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அனுமதி கோரியிருந்தனா். இதேநாளில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உத்ஸவம் நடத்த மற்றொரு பிரிவினா் அனுமதி கேட்டிருந்தனா்.

இந்நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், தலைஞாயிறு மதகடி பகுதியிலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு 2 பேருக்குமேல் கூடாத வகையில், புதன்கிழமை (ஏப்.13) காலை 6 மணி முதல் ஏப். 17 நள்ளிரவு 12 மணி வரை 5 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி ஆணை பிறப்பித்தாா்.

இதையடுத்து, புதன்கிழமை காலைமுதல் அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஊரடங்கு குறித்து அறியாத கிராம மக்கள் வழக்கம்போல் அப்பகுதியில் நடமாடினா். அவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.