கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

நவகிரகங்களில் குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வியாழக்கிழமை அதிகாலை சரியாக 4.16-க்கு இடம் பெயா்ந்தாா். இதையொட்டி, மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமேதா தெட்சிணாமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமுக அா்ச்சனை மற்றும் பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஆலய தலைமை அா்ச்சகா் நா. பாலச்சந்திர சிவாச்சாரியா் மேற்கொண்டாா்.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.