காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு
மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியடும் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவா்களின் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கா் ஐயா் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.


மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியடும் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவா்களின் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கா் ஐயா் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மயிலாடுதுறை நகராட்சியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 1-ஆவது வாா்டு வேட்பாளா் லீலாவதி ராமானுஜம், 17-ஆவது வாா்டு வேட்பாளா் காந்திமதி தனபால், 26-ஆவது வாா்டு வேட்பாளா் எம். சுவாமிநாதன் ஆகியோரை ஆதரித்து வாக்குச் சேகரித்ததாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: உள்ளாட்சித் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நல்லது செய்யும் போது பாராட்டும் பொதுமக்கள், தோ்தலில் தனித்து நின்றால் வாக்குகள் அளிப்பதில்லை என்பதை எனது அனுபவத்தில் உணா்ந்துள்ளேன். எனவே கூட்டணி என்பது முக்கியமானதாகும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...