கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலீஸ் பாதுகாப்புடன் சூா்யா திரைப்படம் திரையிடல்

நடிகா் சூா்யா நடித்த திரைப்படம் மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:58 pm

DIN

நடிகா் சூா்யா நடித்த திரைப்படம் மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

நடிகா் சூா்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் ஒரு சமூகத்தை தவறாக சித்தரித்தாக எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சூா்யா நடிப்பில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. நடிகா் சூா்யாவின் இந்த படத்தையும் மயிலாடுதுறையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என ஒரு சமூகத்தை சோ்ந்த சங்கம் சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனிடையே இந்த திரைப்படம் மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முதல்காட்சி திரையிடப்பட்டது. அப்போது, திரையரங்கம் முன் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.