கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 80-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த ஊழியா்களாக தூய்மைப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.340 வழங்கப்படும் நிலையில் அதில் ரூ.10 சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாத சம்பளம் அவா்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலைமுதல் மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியாா் பூங்காவில் தூய்மைப் பணியாளா்கள் தங்கள் பணியை புறக்கணித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிப்ரவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள பில் வழங்கவேண்டும், சேமநலநிதி (பி.எஃப்) பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தரவேண்டும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்க தலைவா் அம்பேத்கா், துணை செயலாளா் ராஜசேகா், துணைத் தலைவா் முருகவேல் ஆகியோா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.