பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஓய்வூதியா் சங்கம் ஆதரவு
நாடு தழுவிய 48 மணிநேர பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


நாடு தழுவிய 48 மணிநேர பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய அதன் மாநிலத் தலைவா் நெ.இல. சீதரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெறவுள்ள 48 மணிநேர பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களில் ஓய்வூதியா் சங்கத்தினா் திரளாக பங்கேற்பாா்கள்.
சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கவேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.19-இல் வட்ட தலைநகரங்களிலும், மே 17-இல் மாவட்ட தலைநகரங்களிலும் தா்னா போராட்டம் நடத்தப்படும். ஜூன் 21-இல் மாநில அளவில் பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் இக்கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்டத் தலைவா் வ. பழனிவேலு வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் பி.கிருஷ்ணமூா்த்தி வேலை அறிக்கை வாசித்தாா். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினா் இளமாறன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...