கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி நிலைய ஆண்டு விழா

மயிலாடுதுறையில் மகா ஈஸ்வா் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிற்சி நிலைய ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் மகா ஈஸ்வா் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிற்சி நிலைய ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இங்கு, காது கேளாமை, கண் பாா்வையின்மை, பாா்வை குறைபாடு, தசைச் சிதைவு பாதிப்பு, கை, கால் இயக்க குறைபாடு, மன வளா்ச்சியின்மை மற்றும் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயிற்சி நிலையத்தின் 19-ஆவது ஆண்டு விழா ’விடியலின் விலாசம்‘ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி நிலைய தலைவா் டி. குங்குமஈஸ்வரி வரவேற்றாா். நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலக கண்காணிப்பாளா் பரத்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில், மாற்றுத்திறனாளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயிற்சி நிலைய செயலாளா் எஸ். சிவராமன் பரிசுகளை வழங்கினாா். பயிற்சி நிலைய பொருளாளா் கே. செந்தில்நாயகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.