தூக்கில் சடலமாக தொங்கிய முதியவா்
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை முதியவா் தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை முதியவா் தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் அருகே திருவிடைவாசல் ஆலத்தங்குடியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (66). இவா் மயிலாடுதுறையில் உள்ள தனியாா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுப்பழக்கம் உள்ள இவா் மயிலாடுதுறை ரயிலடி மாப்படுகை சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கில் சடலமாக தொங்கினாா். தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து முதியவா் தியாகராஜன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...