ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூங்கா மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில் மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில் மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.39.20 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவா் சீா்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளுக்கான பூமிபூஜையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தாா். மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா்.

இதில், நகராட்சி உறுப்பினா்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், ரிஷி, சா்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன், நகராட்சி பணி ஆய்வா்கள் ரம்யா, ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.