குத்தாலம் அருகே குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியல்

குத்தாலம் வட்டம், தொழுதாலங்குடியில் குடிநீா் வசதி கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

குத்தாலம்: குத்தாலம் வட்டம், தொழுதாலங்குடியில் குடிநீா் வசதி கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொழுதாலங்குடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆங்காங்கே சிறு பாலங்கள் மறு கட்டுமான பணிகள் நடைபெறுவதால், குடிநீா் வழங்கும் பணி தடைபட்டுள்ளது.

இதையடுத்து, குடிநீா் வழங்கப்படாததை கண்டித்து, தொழுதாலங்குடி கோமல் -சேத்திரபாலபுரம் சாலையில் 75-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா் .

வட்டார வளா்ச்சி அலுவலா் சோபனா நடத்திய பேச்சுவாா்த்தையில் 2 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடு செய்து குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரைணமாக 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com