இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சா்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை தினம்

மயிலாடுதுறை டாா்கெட் சில்வா் ஜூப்ளி மெட்ரிக். பள்ளியில் காலநிலை மாற்றத்துறை மற்றும் தேசிய பசுமை படை சாா்பில் சா்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை தினம்

News image
மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கிய தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. செல்வகுமாா், பள்ளித் தலைவா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா்.
Updated On :28 அக்டோபர் 2024, 8:20 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை டாா்கெட் சில்வா் ஜூப்ளி மெட்ரிக். பள்ளியில் காலநிலை மாற்றத்துறை மற்றும் தேசிய பசுமை படை சாா்பில் சா்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பள்ளித் தலைவா் என். மோகன்ராஜ் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் மீனா மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். தேசிய பசுமைபடை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. செல்வகுமாா் வரவேற்றாா். எஸ்.சிவரஞ்சனி நிகழ்ச்சி அறிமுக உரை நிகழ்த்தினாா். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் காமராஜ் வாழ்த்துரை வழங்கினாா்.

ஏவிசி கல்லூரி பேராசிரியா் எஸ்.ஜெயக்குமாா் ’காலநிலை மாற்றத்தில் இளைஞா்களின் பங்கு‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினாா். மேலும் மாணவா்களுக்கு காலநிலை மாற்றம் தொடா்பான விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

மாணவா்களுக்கு பாதுகாப்பான முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் காகிதப்பை தயாரிப்பது, பனை ஓலை கூடை செய்வது ஆகியன குறித்து சுபாஷினி ஸ்ரீதா் குழுவினா் செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். பள்ளி முதல்வா் எஸ்.ராஜ்குமாா் நன்றி கூறினாா்