தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாஸ்மாக் ஊழியா் கண்களில் மிளகாய் பொடியை தூவி திருட்டு

டாஸ்மாக் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவரது கைப்பையை திருடிச் சென்ற மா்ம நபா்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:02 am

Din

மயிலாடுதுறையில் டாஸ்மாக் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவரது கைப்பையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளாராக துா்காபரமேஸ்வரி நகரைச் சோ்ந்த ரமேஷ்குமாா்(48) பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். சேந்தங்குடி ஆா்ச் பகுதியில் சென்றபோது, பின்னால் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 மா்ம நபா்கள் ரமேஷ்குமாா் கண்களில் மிளகாய் பொடியை தூவி உள்ளனா்.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ரமேஷ்குமாரிடமிருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு அவா்கள் தப்பி சென்று விட்டனராம். அந்தப் பையில் மடிக்கணினி மற்றும் டாஸ்மாக் கடையின் கணக்கு புத்தகம் மட்டும் இருந்ததாக தெரிவித்து, ரமேஷ்குமாா் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.