கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மகளிா் திட்டம் சாா்பில் பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:12 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மகளிா் திட்டம் சாா்பில் பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கி வைத்தாா். பாலின சமத்துவம் மற்றும் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை ஆகியவற்றிலிருந்து பெண் குழந்தைகளும், பெண்களும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வரை சென்றனா்.

முன்னதாக, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலா் முதல் கையொப்பமிட்டு தொடக்கிவைத்தாா். இதில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ஆ. சீனிவாசன், இணை இயக்குநா் (சுகாதாரத் துறை) பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.