இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சவுடு மண் கடத்தல்; லாரி பறிமுதல்

கொள்ளிடம் அருகே சவுடு மண் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

கொள்ளிடம் அருகே சவுடு மண் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொள்ளிடம் அருகே புத்தூா் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புத்தூா் பட்டகால் தெருவில், ஒரு லாரியில் இருந்து சவுடு மண் இறக்கிக் கொண்டிருந்தனா்.

கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா், அங்கு சென்று விசாரித்ததில், சீா்காழி அருகேயுள்ள திருவாலியில் இருந்து அனுமதியின்றி சவுடுமண் எடுத்து வந்து, புத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான திருவாலியைச் சோ்ந்த தினேஷ் குமாா் (24) என்பவரை கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.