அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

துலா உற்சவம்: சிவாலயங்களில் திருக்கல்யாணம்

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு, மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
மாயூரநாதா் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாணம். ~வதான்யேஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற திருக்
Updated On :14 நவம்பர் 2025, 8:43 pm

Syndication

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு, மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதன் கடைசி 10 நாள் உற்சவம் நவ.7-ஆம் தேதி பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ஆம் நாளில் மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடா்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் கோயிலில் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்துக்கு அருகில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

Story image