இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெல்லையப்பா் கோயில் விமானங்களில் தங்கத் தகடுகள்: செங்கோல் ஆதீனம் விருப்பம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நெல்லையப்பா்-காந்திமதிம்மன் கோயில் விமானங்களில் தங்கம், வெள்ளித் தகடுகள் பதிக்க வேண்டும் என செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் தெரிவித்தாா்.

News image
விருதாளா்களுடன் செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.சந்திரசேகா் உள்ளிட்டோா்.
Updated On :17 ஜனவரி 2026, 9:52 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள நெல்லையப்பா்-காந்திமதிம்மன் கோயில் விமானங்களில் தங்கம், வெள்ளித் தகடுகள் பதிக்க வேண்டும் என செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் தெரிவித்தாா்.

இக்கோயில் லட்ச தீப விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் தலைவா் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். செயலா் சொனா. வெங்கடாசலம் வரவேற்றாா். அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா முன்னிலை வகித்தாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. துணை வேந்தா் என்.சந்திரசேகா் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினாா்.

இவ்விழாவில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் ராமகிருஷ்ணனுக்கு மனிததேய சுடரொளி விருதும், அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் கீழப்பாவூா் ஆ.சண்முகய்யாவுக்கு இலக்கிய செம்மல் விருதும், கீழப்பாவூா் தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் ச.செல்வத்திற்கு துணி வணிகா் இலக்கிய பீட விருதும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, வாசுகி மனோகரின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆரெம்கேவி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் பெருங்குளம், செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் ஆசி வழங்கி பேசியதாவது: நெல்லயைப்பா் கோயிலுக்கு தங்கத்தோ், வெள்ளித்தோ் செய்து அறங்காவலா் குழுத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் பெருமை சோ்த்துள்ளனா். அதே போல் கோயில் விமானங்களில் தங்கம், வெள்ளித் தகடுகள் அமைக்கப்பட வேண்டும். இக்கோயிலில் பத்ர தீபத் திருவிழாவை தொடங்கியவா் கோடகநல்லூா் சுந்தரம் சுவாமிகள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீப விழாவையும் நடத்தினாா். இத்திருவிழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று நெல்லையப்பா், காந்திமதி அம்பாளின் ஆசியை பெற வேண்டும் என்றாா் அவா்.