வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாற்றுத்திறனாளிகள் கைது

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 7:03 pm

சீா்காழியில் வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் 45 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்டச் செயலாளா் புருஷோத் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ்குமாா், நகரத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.