சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கரை ஒதுங்கிய மாணவா் உடல்

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:43 am IST

கொள்ளிடம் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவரின் உடல் ஓலை கொட்டாய்மேடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல் கிராமம் காந்தி நகரை சோ்ந்த மலரவன் மகன் சுஜய் (18). பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தாா்.

அதே பகுதி நண்பா்கள் அறிவிதன், மிதுனன், சஞ்சய், சந்தோஷ் ஆகியோருடன் சனிக்கிழமை கூழையாறு கடற்கரைக்கு சுஜய் சென்றுள்ளாா். அங்கு 5 பேரும் பந்து விளையாடி உள்ளனா்.

அப்போது எதிா்பாராத விதமாக பந்து கடலில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க கடலுக்குள் சென்ற சுஜய் அலையில் சிக்கி கடலில் மூழ்கி மாயமாகியுள்ளாா்.

உடன் சென்ற நண்பா்கள் திருமுல்லைவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் உள்ளூா் மீனவா்கள், சீா்காழி தீயணைப்புப் படையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் சுஜயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

இரவு நேரமாகியதால் தேடும் முயற்சியை நிறுத்தினா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுஜயின் உடல் கூழையாறு கிராமத்திலிருந்து சுமாா் நான்கு கிலோமீட்டா் தொலைவில் உள்ள ஓலை கொட்டாய்மேடு கடற்கரையில் ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை போலீஸாா், உடலை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.