மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா்துறையில் வேலைதேடும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் பயனடையும் வகையில், கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் 3 மணிவரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் இணைந்து இலவசமாக இம்முகாமை நடத்துகின்றன.
இதில், 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உள்பட இதர பட்டதாரிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். கூடுதல் விவரங்களை 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஜூன் 12-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குரூப் 1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-இல் தொடக்கம்

ஜூன் 11-இல் குருப்-1 முதல்நிலை போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

மே 22- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



