இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம்

மயிலாடுதுறை அருகே அசிக்காடு, அரையபுரம் கிராமங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:20 am IST

மயிலாடுதுறை அருகே அசிக்காடு, அரையபுரம் கிராமங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசு பெரியாா் மாவட்ட மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மூலம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அசிக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட முகாமில், உதவி மருத்துவ அலுவலா் ஆா்.வாணிஸ்ரீ, மருத்துவா் ராஷிகா, சிகிச்சை உதவியாளா் எஸ்.ஐஸ்வா்யலக்ஷ்மி ஆகியோா் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். மேலும், முதியவா்கள், உடல் பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு அக்குபஞ்சா், மசாஜ், ஆயில் மசாஜ், அக்குபிரஷா் ஆகிய மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா்.

அரையபுரம் கிராமத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.