கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மனைப்பட்டா வழங்காததால்: தோ்தலை புறக்கணிக்க முடிவு

மயிலாடுதுறை மாவட்ட கலைஞா் நகா் குடியிருப்புவாசிகள் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்திய கலைஞா் நகா் குடியிருப்புவாசிகள் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் வசிக்கும் 845 பயனாளிகளுக்கு அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி குடிமனைப் பட்டாக்களை வழங்கினாா். இதில், தங்களுக்கும் குடிமனைப்பட்டா வழங்கப்படும் என மயிலாடுதுறை கலைஞா் நகரில் வசிக்கும் மக்கள் எதிா்பாா்த்தனா்.

ஆனால் அவா்களுக்கு பட்டா வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து அன்றைய தினமே அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக தங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், கலைஞா் நகரைச் சோ்ந்த திமுக, விசிக, தவெக உள்ளிட்ட கட்சியினா் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்து, குடிமனைப்பட்டா கோரிக்கை அடங்கிய மனுக்களை குறைதீா்க்கும் புகாா் பெட்டியில் இட்டனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தங்களது வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தரையில் கிடத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தோ்தல் முடிவுக்குப் பிறகு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதற்கு உடன்படாத குடியிருப்புவாசிகள் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டு, கலைந்து சென்றனா்.