அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மறுவரையறை பட்டியலில் திருத்தங்களை தெரிவிக்கலாம்

நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை பட்டியலில் திருத்தம் இருப்பின் ஜன. 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:10 am

DIN

நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை பட்டியலில் திருத்தம் இருப்பின் ஜன. 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி வார்டுகள்,  11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 434 ஊராட்சிகளில் உள்ள 3,426 ஊராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டுகளை பொருத்தவரை மாவட்ட ஊராட்சிச் செயலரும்,  ஊராட்சி ஒன்றிய வார்டுகளை பொருத்தவரை உதவி இயக்குநரும் (ஊராட்சிகள்),   ஊராட்சி வார்டுகளைப் பொறுத்தவரை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மறுவரையறை அலுவலர்களாகவும், மாவட்ட ஆட்சியர் மாவட்ட மறுவரையறை அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை பட்டியல் தொடர்பாக திருத்தங்கள், ஆட்சேபணைகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால், தொடர்புடைய மறுவரையறை அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக 2018 ஜன. 2-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.