வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கிறிஸ்துமஸ்: நாகை எம்எல்ஏ வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை  கொண்டாடும் மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத்

Updated On :25 டிசம்பர் 2018, 8:42 am IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை  கொண்டாடும் மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. தமிமுன்அன்சாரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உலகின் மிகப் பெரிய பண்டிகைகளுள் கிறிஸ்துமஸ் முதன்மையான ஒன்றாகத் திகழ்கிறது. அன்பின் வடிவமாக இப்பண்டிகையை உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள். 
இந்திய திருநாட்டில் கல்வி, மருத்துவம் வழியாக மாபெரும் மாற்றங்களுக்கு அடிகோலியவர்கள் என்ற வகையில் கிறிஸ்தவ பெருமக்கள் ஆற்றிவரும் சேவைகள் மகத்தானவை. அதுபோல், சமூக நல்லிணக்கத்துக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் துணை நிற்பவர்களாகவும் திகழ்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் நடத்திவரும் கல்வி சாலைகள் அறிவுப் புரட்சிக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் வழிகாட்டுகிறது. சேவை நிறுவனங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றன. இதையெல்லாம் பாழ்படுத்த துடிக்கும் தீய சக்திகளை முறியடிக்கவேண்டும். கிறிஸ்துமஸ்  பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.