ஆக்சுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தெரிவித்தார்.
செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையம் மூலம் ஆக்கூர், சின்னங்குடி, தலைச்சங்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுகாதாரவசதி பெறுகின்றனர்.
இந்நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் தேவை என அப்பகுதி மக்கள் பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பவுன்ராஜிடம் கோரிக்கை மனு அளித்ததைத் தொடர்ந்து, எம்எல்ஏ அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கழிப்பறை வசதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடுசெய்யப்படும் எனவும், சுகாதார நிலையத்தில் காணப்படும் குப்பைகளை அகற்ற வண்டி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.