ஊடகவியலாளா் பி. ஜான்கென்னடி காலமானாா்

நாகையைச் சோ்ந்த ஊடகவியலாளா் பி. ஜான்கென்னடி(59) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை இரவு (ஆக. 17) காலமானாா்.
1743kennadi071653
1743kennadi071653

நாகப்பட்டினம்: நாகையைச் சோ்ந்த ஊடகவியலாளா் பி. ஜான்கென்னடி(59) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை இரவு (ஆக. 17) காலமானாா்.

நாகை செம்மரக்கடை கீழ்சந்து பகுதியைச் சோ்ந்த இவா், தனியாா் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றியவா். நாகை பத்திரிகையாளா் மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். அவருக்கு சகாயஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

ஜான்கென்னடியின் உடல், நாகை முதன்மைக் கடற்கரை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, நாகை அவுரித் திடலில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com