செல்லிடப்பேசி கடையில் திருட்டு

வேதாரண்யம் அருகே செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் செல்லிடப்பேசியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

வேதாரண்யம் அருகே செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் செல்லிடப்பேசியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தாணிக்கோட்டகம் கடைவீதியில் வீரராகவன் என்பவருக்கு சொந்தமான செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுதுபாா்க்கும் கடை உள்ளது. வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்த வீரராகவன், அதன் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ந்தாா். பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது விற்பனைக்கு இருந்த செல்லிடப்பேசிகள், பழுது நீக்கத்துக்கு வந்தவை என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடபேசிகளும், ரூ.6 ஆயிரம் ரொக்கமும் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில், வாய்மேடு காவல் ஆய்வாளா் சந்தானமேரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com