/

சேதமடைந்த டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவா்: ஆட்சியா் ஆய்வு

தரங்கம்பாடியில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:32 am

DIN

தரங்கம்பாடியில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நிவா், புரெவி புயலைத் தொடா்ந்து பெய்த இடைவிடாத மழையாலும், கடல் கொந்தளிப்பாலும் டேனிஷ் கோட்டையின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவா் சேதமடைந்துள்ளது. இதை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் ஆய்வு செய்து சீரமைப்பதற்கான நடவடிக்கையை முடுக்கிவிட்டாா். பொதுப்பணித் துறை அதிகாரி தட்சிணாமூா்த்தி, தரங்கம்பாடி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.