விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின்சாரத் திருத்த சட்ட வரைவு மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் அவசரச் திருத்தச் சட்டம், வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும், புதிய கடன்களை வழங்க வேண்டும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.