ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வைத்தீஸ்வரன் கோயிலில் காா்த்திகை வழிபாடு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றாா்.

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படும் இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகியோா் அருள்பாலிக்கின்றனா்.

இங்கு ஐப்பசி மாத காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காா்த்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனுறை செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகாா்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

காா்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதினம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா். கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தாா்.

திரளான பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.